மகளிர் தினத்தில் ஆண்ட்ரியா வெளியிட்ட புகைப்படம்.. கொந்தளித்த நெட்டிஷன்கள்.!

andrea


தேசிய மகளிர் தினத்தை முன்னிட்டு உலகம் முழுவதும் இன்றைய நாள் மார்ச்-08 -ம் தேதி சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. அந்தவகையில், ஒரு தாயாக மனைவியாக தங்கையாக சகோதரியாக பாவிக்கப்பட்டு வரும் பெண்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். பல முன்னணி நடிகைகள் மகளிர் தினத்தில், தங்களுடைய புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.  

அந்தவகையில், தேசிய மகளிர் தினத்தையொட்டி நடிகை ஆண்ட்ரியா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த இன்ஸ்டாகிராம் பதிவில் ஒரு பெண்ணாக இருப்பதில் இன்றும் தினமும் பெருமைகொள்கிறேன் என்று பதிவிட்டிருந்தார். அந்த புகைப்படம் தான் இன்றைய மகளிர் தினத்தில் ஹாட் டாஃபிக்-ஆக மாறி இருக்கிறது. அந்த புகைப்படம் பற்றியான விமர்சனங்களை தற்போது நெட்டிஷன்கள் முன்வைத்து வருகின்றனர். கமெண்ட் பாக்ஸில்  நேர்மறை கருத்துக்களும், எதிர்மறை கருத்துக்களும் இடம் பெற்றிருக்கின்றன. 

மகளிர் தினத்தில் பல நடிகைகள் தங்களுடைய புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார்கள். குறிப்பாக, நடிகை ஐஸ்வயா ராஜேஷ், காஜல் அகர்வால், சம்யுக்தா, அனிகா இன்னும் சில நடிகைகள் பதிவிட்டுள்ளனர். இருப்பினும் நடிகை ஆண்ட்ரியா பதிவிட்டுள்ள புகைப்படம் பற்றிய கருத்துதான் தற்போது பேசப்பட்டு வருகிறது. கவர்ச்சியான தோற்றத்துடன் கூடிய புகைப்படத்தை வெளியிட்டிருக்கக்கூடிய நடிகை ஆண்ட்ரியா மீது பல்வேறு எதிர்மறை விமர்சனங்கள் நெட்டிஷன்களால் வைக்கப்பட்டு வருகிறது. படங்களில் பெண்களுக்கு ஆதரவாக பேசி, கதாபாத்திரத்தில் நடித்துவந்தாலும், உடலை பார்த்து பெண்களின் நடத்தையை தீர்மானிக்கிறார்கள் என்பது வருந்தத்தக்க விஷயமே..