அண்ணாவின் பிறந்தநாள் மாநாட்டை வெற்றி பெற செய்ய வேண்டும் - வைகோ 

vaiko

மண்டல நிர்வாகிகள் கூட்டம்

ம.தி.மு.க.சார்பில் வருகிற செப்டம்பர் 15-ந்தேதி மதுரையில் அண்ணாவின் 115-வது பிறந்தநாள் மாநாடு நடைபெற உள்ளது. இந்த மாநாடு தொடர்பாக ம. தி. மு. க. மத்திய மண்டல நிர்வாகிகள் கூட்டம் திருச்சியில் நடந்தது. கூட்டத்துக்கு மாநகர் மாவட்ட செயலாளர் வெல்லமண்டி சோமு தலைமை தாங்கினார். புறநகர் வடக்கு மாவட்ட செயலாளர் டி. டி. சி. சேரன் வரவேற்று பேசினார் கூட்டத்தில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட ம.தி. மு.க. பொதுச்செயலாளர் வைகோ பேசியதாவது:-

தமிழக மக்கள் நலனில் மதிமுக 

மதுரையில் நடைபெறும் அண்ணாவின் 115-வது பிறந்தநாள் மாநாட்டை வெற்றி பெற செய்ய வேண்டும். ஸ்டெர்லைட் ஆலையை மூடுவதற்கு வழக்கு தொடர்ந்து வெற்றி பெற்றுள்ளோம். முல்லை பெரியாறு அணை விவகாரத்தில் வெற்றி பெற்று உள்ளோம். தமிழக மக்களின் நலனுக்காக ம. தி.மு.க. அதிக போராட்டங்களை நடத்தி வருகிறது. இவ்வாறு அவர் பேசினார். கூட்டத்தில் மாநில துணை பொதுச்செயலாளர் ஆடுதுரை முருகன், மாநில துணை பொதுச்செயலாளர் ரொஹையா, அரியலூர் எம்.எல்.ஏ.சின்னப்பா உள்ளிட்ட ம. தி. மு. க. நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட செயலாளர் மணவை தமிழ்மாணிக்கம் நன்றி கூறினார்.