சென்னையில் ஆசிய போட்டி
ஆக்கி போட்டிகளை நாட்டில் பிரபலப்படுத்தும் முயற்சியாக பல்வேறு நகரங்களில் போட்டிகள் நடத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில், வரவிருக்கும் 'ஆசிய ஆக்கி போட்டி' சென்னையில் நடைபெற இருக்கிறது. சென்னையில் 2007- ஆண்டு ஆக்கி போட்டி நடந்த நிலையில், 16 ஆண்டுகள் கழித்து ஆசிய ஆக்கி போட்டி நடைபெறவுள்ளதாக உதயநிதி அறிவித்துள்ளார். மேயர் ராதாகிருஷ்ணன் ஸ்டேடியத்தில், ஆகஸ்ட் 3-ம் தேதி முதல் 12-ஆம் தேதி வரை ஆசிய ஆக்கி போட்டி நடைபெறும்.
உதவிகளை செய்ய உள்ள முதலமைச்சர்
இந்த போட்டியில் ஜப்பான், மலேசியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளை சேர்ந்த அணியினர் கலந்து கொள்கின்றனர் என்றும் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். மேலும், இந்த போட்டியில் மாபெரும் வெற்றியடைய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அனைத்து உதவிகளையும் வழங்க இருக்கிறார்.