முதலாளிகளுக்கு சாதகமாக வங்கிகள் - நீதிபதி வேதனை.!

website post (100)

முதலாளிகளுக்கு சாதகமாக வங்கிகள் செயல்படுகின்றன

பெரும் முதலாளிகளுக்கு சாதகமாக வங்கிகள் செயல்படுகின்றன என்று உயர்நீதிமன்ற மதுரைக்கிளை வேதனை தெரிவித்துள்ளது. வங்கிக்கடன், வீட்டுக்கடன், தொழிற்சாலை கடன் குறித்த வழக்கு நேற்று (மார்ச்-15) விசாரணைக்கு வந்தது. அப்போது குறிப்பிட்ட நீதிபதி;

தனியார் பெரும் முதலாளிகளுக்கு சாதகமாக வங்கிகள் செயல்படுகின்றன. கடன் வாங்கி திரும்ப செலுத்தும் வாடிக்கையாளர்களுக்கு மீண்டும் கடன் கேட்டால் கொடுப்பதில்லை. சாதாரண பாமரனுக்கு ஒரு சட்டம், பெரும் முதலாளிகளுக்கு ஒரு சட்டம் என வங்கி விதிகளில் உள்ளதா என கேள்வி எழுப்பினர். 

மேலும், ஏமாற்றுவருக்கே கடன் தரப்படுகிறது. இவர்களுடன் வங்கி மேலாளர்களும் இணைந்து செயல்படுகின்றனர் என்று வங்கிக்கடன், வீட்டுக்கடன், தொழிற்சாலை கடன் குறித்த வழக்கில் உயர்நீதிமன்ற மதுரை கிளை வேதனை தெரிவித்துள்ளது.