தமிழகத்தில் ஐஏஎஸ் அதிகாரிகள் மாற்றம்.! 

ias

தமிழகத்தில் 7 ஐஏஎஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. 

* போக்குவரத்து செயலாளர் பணீந்தரரெட்டிக்கு இயற்கை வளங்கள் துறை பொறுப்பு கூடுதலாக வழங்கப்பட்டுள்ளது.

* போக்குவரத்து ஆணையராக இருந்த நிர்மல்ராஜ் புவியியல் மற்றும் சுரங்கத்துறை இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ளார். 

* ஜெயகாந்தன் சமூகநலத்துறை ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார். 

* மதுரை மாநகராட்சி ஆணையராக கே.ஜே.பிரவீன் குமார் நியமனம் செய்யப்பட்டுள்ளார். 

* மதுரை மாநகராட்சி ஆணையராக இருந்த சிம்ரன்ஜித் சிங் கலோன் சென்னை பெருநகர குடிநீர் வழங்கல் வாரிய செயல் தலைவராக மாற்றப்பட்டுள்ளார். 

* சேலம் மாநகராட்சி ஆணையராக எஸ். பாலசந்தர் நியமிக்கப்பட்டுள்ளார். 

* கே.ஜே.பிரவீன்குமார், சிம்ரன்ஜித் சிங் கலோன், பாலசந்தர் ஆகியோர் வெளிநாட்டு சேவை பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

* தமிழக போக்குவரத்துத்துறை ஆணையராக சண்முகசுந்தரம் நியமிக்கப்பட்டுள்ளார் 

* மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை கமிஷனராக ரத்னா நியமனம்.