ரூ.671 கோடி மதிப்பீட்டில் புதிய கட்டடங்களை திறந்து வைத்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

mk stalin

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் சென்னை தலைமை செயலகத்தில் நடந்த நிகழ்வின்போது, 75 முடிவுற்ற திட்டப் பணிகளை காணொளி காட்சி வாயிலாக திறந்து வைத்தார்.

சென்னை, நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையின் கீழ் செயல்படும், தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம், சென்னைப் பெருநகர் குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்று வாரியம், பேரூராட்சிகள் ஆணையரகம், நகராட்சி நிர்வாகத் துறை மற்றும் பெருநகர சென்னை மாநகராட்சி ஆகியவற்றின் சார்பில் பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வந்தது.

இந்நிலையில், ரூ. 671.80 கோடி மதிப்பீட்டிலான 75 முடிவுற்ற திட்டப் பணிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். ரூ.14 கோடி மதிப்பீட்டில் புதிதாக கட்டப்படவுள்ள 4 நகராட்சி அலுவலகக் கட்டடங்களுக்கும் அவர் அடிக்கல் நாட்டினார்.