கர்ப்பிணி பெண்களுக்கு சமுதாய வளைகாப்பு நிகழ்வு - அமைச்சர் கே.என்.நேரு  சீர்வரிசை வழங்கி  வாழ்த்தினார்.

minister k.n.nehru

 திருச்சி மாவட்ட ஆட்சியர் வளாக கூட்ட அரங்கில்  ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டத்தின் சார்பில் தாய் சேய் நலனை மேம்படுத்தும் வகையில்  சமுதாய வளைகாப்பு நிகழ்வு நகராட்சி நிர்வாகத்துறை துறை அமைச்சர் கே.என். நேரு தலைமையில் நடைபெற்றது. இதில் 100 கர்ப்பிணி பெண்களுக்கு மஞ்சள், குங்குமப்பூ,  கண்ணாடி வளையல், பழம் மற்றும் பொன்னான ஆயிரம் நாட்கள் குறித்த மடிப்பேடு அடங்கிய பொருட்களை வழங்கிய அமைச்சர் கே.என்.நேரு அட்சதை தூவி வாழ்த்தினார்.

இவ்விழாவில் மாவட்ட ஆட்சித் தலைவர் பிரதீப் குமார், மாநகராட்சி ஆணையர் வைத்திநாதன், மாநகராட்சி மேயர் அன்பழகன், ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சிப் பணிகள் மாவட்ட திட்ட அலுவலர் ரேணுகா மண்டல குழு தலைவர்கள் மாமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்...