கர்நாடக தேர்தல் முடிவு காங்கிரஸ் – திருச்சியில் வெடி வெடித்து இனிப்புகள் வழங்கி கொண்டாடிய காங்கிரஸார்

congress won

கர்நாடகா தேர்தல் 

224 தொகுதிகளை கொண்ட கர்நாடக சட்டசபைக்கு கடந்த 10-ந் தேதி தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில் பதிவான ஓட்டுகள் இன்று எண்ணப்பட்டு வருகிறது. காலை 8 மணிக்கு ஓட்டு எண்ணிக்கை தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த வாக்கு எண்ணிக்கையின் முடிவில் காங்கிரஸ் கட்சி பெரும்பான்மையான இடங்களை கைப்பற்றி தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்க உள்ளது. இதனை இந்தியா முழுவதும் உள்ள காங்கிரஸ் கட்சியினர் கொண்டாடி வருகின்றனர். 

திருச்சியில் கொண்டாட்டம்

இதன் ஒரு பகுதியாக திருச்சி ஜங்ஷன் ரயில் நிலையம் அருகே உள்ள ராஜிவ் காந்தி சிலை முன்பு காங்கிரஸ் மாநில பொதுச்செயலாளர் சரவணன் தலைமையில் வெடி வெடித்து இனிப்புகள் வழங்கி கொண்டாடப்பட்டது. இந்நிகழ்வில் பொதுக்குழு உறுப்பினர் ரெக்ஸ், கோட்ட தலைவர் பிரியங்கா பட்டேல் மற்றும் காங்கிரஸ் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டார்.