மேகதாதுவில் அணைக் கட்டுவது கடும் கண்டனத்துக்குரியது - விஜயகாந்த் 

captain vijayakanth

தமிழக விவசாயிகள் கொந்தளிப்பு

கர்நாடகா துணை முதலமைச்சர் டி.கே.சிவகுமார் மேகதாதுவில் அணைக்கட்டுவது உறுதி எனக் கூறியிருந்த நிலையில், தமிழ்நாட்டில் பல்வேறு கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. இந்நிலையில், தேமுதிக தலைவரும், அக்கட்சியின் பொதுச்செயலாளருமான விஜயகாந்த் கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், மேகதாதுவில் அணை கட்ட முந்தைய பாஜக அரசு தீவிரம் காட்டி வந்த நிலையில், தற்போது, புதிதாக பதவியேற்றிருக்கும் காங்கிரஸ் கட்சியும் மேகதாது விவகாரத்தை கையில் எடுத்திருப்பது தமிழக விவசாயிகளிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. 

தமிழகம் பாலைவனமாக மாறிவிடும்

கர்நாடகாவில் மாறி மாறி ஆட்சி செய்து வரும் பாஜகவும், காங்கிரஸும், காவிரியின் குறுக்கே பல்வேறு அணைகளை கட்டி, தமிழக விவசாயிகளின் வயிற்றில் அடித்து வருகின்றன. மேகதாதுவில் அணை கட்டினால் தமிழகம் பாலைவனமாக மாறிவிடும். இந்த விவகாரத்தில் தமிழக முதல்வர் முழு கவனம் செலுத்தி காவிரியின் குறுக்கே மேகதாது அணைக்கட்டும் திட்டத்தை முற்றிலுமாக கைவிட கர்நாடகா காங்கிரஸ் கட்சியிடம் வலியுறுத்த  வேண்டும். தமிழக விவசாயிகளின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க மேகதாதுவில் அணைக்கட்ட கர்நாடகத்திற்கு மத்திய அரசும் அனுமதி அளிக்கக் கூடாது. என்று  தேமுதிக தலைவர் கண்டனம் தெரிவித்துள்ளார்.