மத்திய பல்கலைக்கழகங்களில் 2023 ஆம் ஆண்டிற்கான இளங்கலை, முதுகலை படிப்புகளுக்கான மாணவர்கள் சேர்க்கைக்கான கியூட் பொதுத் தேர்வை தேசிய தேர்வு முகமை அறிவித்தது. இளங்கலைப் பட்டப்படிப்புகளுக்கான கியூட் தேர்வு விண்ணப்ப விநியோகம் பிப்ரவரி முதல் தொடங்கியது. விண்ணப்பங்களைச் சமர்ப்பிப்பதற்கான கடைசி தேதி மார்ச் 12 எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், 2023-ம் ஆண்டுக்கான கியூட் தேர்வுக்கு விண்ணப்பிக்கும் கால அவகாசம் மார்ச் 30ம் தேதி வரை நீட்டித்து தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது. ஏற்கனவே, க்யூட் தேர்வுக்கு விண்ணப்பிக்க நாளை கடைசி நாளாக இருந்த நிலையில், தற்போது நீட்டிக்கப்பட்டுள்ளது. அதன்படி, விண்ணப்பதாரர்கள் மார்ச் 30ம் தேதி இரவு 9.50 மணி வரை விண்ணப்பிக்கலாம் என்றும் பணம் செலுத்தும் நடைமுறையை இரவு 11.50 மணிக்குள் முடிக்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.