நடிகர் தனுஷ் கேப்டன் மில்லர் படத்தை முடித்த பிறகு எச்.வினோத் இயக்கத்தில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது ரசிகர்கள் கொண்டாட்டத்தில் மூழ்கியுள்ளனர்.
நடிகர் தனுஷ் தற்போது “வாத்தி” திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த திரைப்படம் அடுத்த ஆண்டு ஏப்ரல் 17-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
இந்த படத்தை தொடர்ந்து தற்போது இயக்குனர் அருண் மாதேஷ் வரன் இயக்கத்தில் உருவாகி வரும் “கேப்டன் மில்லர்” படத்தில் நடித்து வருகிறார். இந்த திரைப்படத்திற்கான படப்பிடிப்பு தற்போது விறு விறுப்பாக நடைபெற்று வருகிறது.
இதனையடுத்து நடிகர் தனுஷ் அடுத்ததாக எந்த இயக்குனர் இயக்கும் படத்தில் நடிக்க போகிறார் என்ற எதிர்பார்ப்பு நிலவிவரும் சூழலில் நாளுக்கு நாள் அதற்கான புதிய தகவல் ஒன்று வெளியாகி கொண்டே வருகின்றது.
இந்நிலையில், நடிகர் தனுஷ் கேப்டன் மில்லர் படத்தை முடித்த பிறகு எச்.வினோத் இயக்கத்தில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது ரசிகர்கள் கொண்டாட்டத்தில் மூழ்கியுள்ளனர்.
தமிழில் சதுரங்க வேட்டை, தீரன் அதிகாரம், நேர்கொண்ட பார்வை, வலிமை ஆகிய படங்களை இயக்கிய எச்.வினோத் இயக்கத்தில் தனுஷ் அடுத்ததாக ஒரு புதிய திரைப்படத்தில் நடிக்க கமிட் ஆகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இயக்குனர் எச்.வினோத் தற்போது அஜித்தை வைத்து ’துணிவு’ திரைப்படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்திற்கான இறுதிக்கட்ட பணிகள் மும்மரமாக நடைபெற்று வருகிறது. இந்த படத்தை முடித்த பிறகு தனுஷ் படத்திற்கான வேலைகளை தொடங்குவார் என சினிமா வட்டாரங்கள் கூறுகின்றன.