சமயபுரத்தில் தங்கத்தேர் இழுத்து வழிபாடு செய்த துர்கா ஸ்டாலின் 

durga stalin

முக்கிய கோயில்களில் சாமி தரிசனம்

திருச்சி மாவட்டம் சமயபுரம் மாரியம்மன் கோவிலில் தினதோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் தங்களது நேர்த்தி கடனை செலுத்துவதற்காக தமிழக மற்றுமின்றி வெளி மாவட்டம் மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் வருகை தருகின்றனர். இந்நிலையில், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் மனைவி துர்கா ஸ்டாலின் காலையில் பழனி முருகன் கோவிலில் சாமி தரிசனம் செய்துவிட்டு மாலையில் திருச்சி உறையூர் வெக்காளியம்மன் கோவிலில் சாமி தரிசனம் செய்தார்.

தங்கத் தேர் இழுத்த துர்கா ஸ்டாலின்

அதைத்தொடர்ந்து தமிழகத்தில் உள்ள அம்மன் ஸ்தலங்களில் மிகவும் பிரசித்தி பெற்ற திருச்சி சமயபுரம் மாரியம்மனை  கோவிலுக்கு துர்கா ஸ்டாலின் வருகை தந்து கோவிலில் உள்ள மூலவரை அம்மனை தரிசனம் செய்தார். மேலும், கோவில் உள்பிரகாரத்தில் தங்க தேர் இழுத்து பவனி வந்தார். அதனை தொடர்ந்து தங்கத் தேரில் அமர்ந்திருந்த அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை மற்றும் தீபாராதனை காட்டப்பட்டது. அப்போது துர்கா ஸ்டாலின் தீபாராதனை தொட்டு வணங்கி வழிபாடு செய்தார். இந்நிகழ்வின்போது கோவில் இணை ஆணையர்  கல்யாணி கோவில் பணியாளர்கள் அரசு அதிகாரிகள்  உடன் இருந்தனர்.