ஐபிஎல் பாஸ் கிடைக்கவில்லை
தமிழ்நாடு சட்டமன்றத்தில் விளையாட்டுத் துறை மீதான மானிய கோரிக்கையின் போது அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி வேலுமணி அதிமுக உறுப்பினர்களுக்கு ஐபிஎல் டிக்கெட் வழங்க வேண்டி கோரிக்கை விடுத்தார். தொடர்ந்து பேசிய அவர், கடந்த அதிமுக ஆட்சியில், சட்டமன்ற உறுப்பினர்கள் அனைவருக்கு ஐபிஎல் டிக்கெட் கிடைக்க செய்தோம். ஆனால் தற்போது அதிமுக உறுப்பினர்களுக்கு மட்டும் டிக்கெட் வழங்கப்படவில்லை. எனவே அனைவருக்கு ஐபிஎல் பாஸ் வழங்க ஏற்பாடு செய்ய வேண்டும் என கேட்டார்.
உங்கள் நண்பர் அமித்ஷா
இதற்கு பதிலளித்து பேசிய விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், 4 வருடங்களுக்கு பிறகு இப்போது தான் சேப்பாக்கத்தில் ஐபிஎல் போட்டிகள் நடைபெற்று வருகிறது. கடந்த 4 வருடங்களாக யாருக்கு ஐபிஎல் டிக்கெட் வழங்கினார் என்பது தெரியவில்லை. அதுமட்டுமல்லாமல், ஐபிஎல் போட்டிகளை நடத்தி வருவது பிசிசிஐ, அதற்கு உங்களுடைய நெருங்கிய நண்பர் அமித்ஷாவின் மகன் ஜெய்ஷா தான் தலைவராக உள்ளார். ஆகவே அவரிடம் நீங்கள் கேட்டால் நிச்சயம் செய்து கொடுப்பார். எனவே அவரிடம் பேசி அனைவருக்கும் ஐபிஎல் டிக்கெட் கிடைக்க ஏற்பா