தனது பெயரில் போலி விளம்பரங்கள் - மும்பை குற்றப் பிரிவு அலுவலகத்தில் சச்சின் புகார்

sachin

பல நிறுவனங்களில் விளம்பர தூதர்

கிரிக்கெட் உலகின் ஜாம்வானான சச்சின் டெண்டுல்கர் கடந்த 2013 ஆம் ஆண்டு கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றார். தற்போது ஐபிஎல் அணிகளில் ஒன்றான மும்பை இந்தியன்ஸ் அணியின் ஆலோசகராக உள்ள நிலையில், ஓய்வுக்குப் பிறகும் பல நிறுவனங்களின் விளம்பர தூதராகவும் உள்ளார். இந்நிலையில், மும்பை குற்றப் பிரிவு அலுவலகத்தில் சச்சின் டெண்டுகர் பரபரப்பு புகார் ஒன்றை அளித்துள்ளார். 

சச்சின் பெயரில் போலி விளம்பரங்கள்

அந்த புகாரில் தனது படம், பெயர், மற்றும் குரல் ஆகியவற்றை பயன்படுத்தி பல போலி விளம்பரங்கள் இணையத்தில் ஒளிபரப்பப்பட்டு வருவதாகவும்,  எனவே அனுமதியின்றி தனது படம், பெயர், குரலை பயன்படுத்துவோர் மீது, நடவடிக்கை எடுக்கக் கோரி புகார் அளித்துள்ளார். சச்சின் டெண்டுல்கரின் இந்த புகாரை அடுத்து இந்திய குற்றத் தடுப்பு சட்டம் 426, 465, மற்றும் 500 ஆகிய பிரிவுகளீன் கீழ் காவல்துறை அதிகாரிகள் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.