பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தொடர்ந்து 4 ஆம் நாளாக விவசாயிகள் அரைநிர்வாண போராட்டம்

formers protest

தொடர்ச்சியாக போராடும் விவசாயிகள் 

தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க மாநில தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் திருச்சி சிந்தாமணி அண்ணாசாலை எதிரில் பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தி விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றன. தொடர்ந்து 4-ம் நாள் போராட்டமாக இன்று அரைநிர்வாணத்துடன் போராடிய விவசாயிகள் மத்திய மாநில அரசுகளுக்கு எதிராக முழக்கங்களை எழுப்பினர். 

மத்திய, மாநில அரசுகளுக்கு கண்டனம்

இப்போராட்டத்தின் போது, மத்திய, மாநில அரசுகள் விவசாய விலை பொருட்களுக்கு இரண்டு மடங்கு லாபகரமான விலையை கொடுக்காமல் விவசாயிகளை வஞ்சித்து வருவதாக குற்றம்சாட்டிய  விவசாயிகள் ஒரு கிலோ நெல்லுக்கு 54ரூபாயும் ஒரு டன் கரும்புக்கு 8,100 ரூபாய் வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும், விவசாயிகள் வாங்கிய கடனை தள்ளுபடி செய்ய வேண்டும் எனவும் வலியுறுத்தி விவசாயிகள் தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அப்போது மத்திய. மாநில அரசுகள் முழு பூசணிக்காயை சோற்றில் மறைத்து போல செயல்படுவதை சுட்டுக்காட்டும் விதமாகவும் நூதன முறையில் போராடினர்.