சுதந்திர தினத்தையொட்டி கருப்புகொடியுடன் விவசாயிகள் போராட்டம்

formers protest

தொடர் போராட்டம்

தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க தலைவர்  அய்யாக்கண்ணு  தலைமையில் விவசாயிகள் விவசாயிகளின்  பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திருச்சி அண்ணாசிலை அருகில் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். தங்களது கோரிக்கை நிறைவேறும் வரை காத்திருப்பு தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருவதாகவும் விவசாயிகள் தெரிவித்தனர். 

விவசாயிகளுக்கு கருப்பு தினம் 

அதன்படி, தொடர்ச்சியாக 19ம் நாள் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் விவசாயிகள் மத்திய, மாநில அரசுகளுக்கு பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்தனர். மேலும், இந்திய திருநாட்டிற்கே சுதந்திர தினம் இன்று ஆனால் தமிழக விவசாயிகளுக்கு மட்டும் கருப்பு தினம் இன்று என்பதை வலியுறுத்தும் விதமாக  அரைநிர்வாணத்துடனும் (கோவனதுடன்) கருப்புகொடி கட்டி தலையில் கருப்பு துணியால் முக்காடு அணிந்தும் விவசாயிகள் நூதன போராட்டம் நடத்தினர்.