பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி விவசாயிகள் அரை நிர்வாணப் போராட்டம்

formers protest

தொடர் போராட்டம்

தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க தலைவர்  அய்யாக்கண்ணு  தலைமையில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திருச்சி அண்ணாசிலை அருகில் விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து 13 வது நாளாக நடந்த இந்த போராட்டத்தில் மத்திய மாநில அரசுகளுக்கு எதிராக முழக்கங்களை எழுப்பினர்.  

கைகளில் மண்டை ஓடுகளை ஏந்திய விவசாயிகள்

மத்திய, மாநில அரசுகள் விவசாயிகளின் கோரிக்கைகளை  ஏற்காமல், வங்கிகளில் வாங்கிய பயிர்க் கடன்களுக்கு விவசாயிகளின் பொருட்களை வங்கிகள் அபகரித்து கொள்வதாக குற்றம்சாட்டினர். மேலும், நிலம், வீடு, விவசாய உபகரணங்கள் வாகனங்கள், டிராக்டர் போன்றவைகளை ஜப்தி செய்து ஏலம் விடுவதால் விவசாயிகள் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாகவும் புகார் தெரிவித்தனர். எனவே, விவசாயிகளின் கடன்களை அரசு தள்ளுபடி செய்யாததால் தற்கொலை செய்துகொண்ட விவசாயிகளின் மண்டைஓடு, எலும்புகளை கையில் ஏந்தி அரைநிர்வானத்துடன் போராட்டத்தில் ஈடுபட்டனர்.