CPS திட்டத்தில் ஓய்வு பெற்றவர்களுக்கு பணிக் கொடை வழங்க கோரி ஆட்சியர் அலுவலகம் முன்பு உண்ணாவிரத போராட்டம்.

cps protest

பணிக்கொடை வழங்க கோரிக்கை

CPS திட்டதில் பல ஆசிரியர்கள், ஊழியர்கள் தமிழ்நாட்டில் பணி புரிந்து வரும் நிலையில், திட்டத்தில் இருந்த ஓய்வு பெற்ற அரசு ஊழியர் ஆசிரியர் குடும்பத்தினருக்கு பணிக்கொடை வழங்க கோரி CPS சங்கம் சார்பில் திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு உண்ணாவிரத் போராட்டம் நடைபெற்றது. ராஜஸ்தான், ஜார்கண்ட், சண்டீஸ்கர், பஞ்சாப், ஹிமாச்சல பிரதேசம் மாநிலங்களில் சிபிஎஸ் திட்டம் ரத்து செய்யப்பட்டாலும், அதன் அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு பணிகொடை வழங்கப்பட்டு வருவதாகவும், எனவே திமுகவின் சட்டமன்ற தேர்தல் கள வாக்குறுதி என் 39 படி சி பி எஸ் ஐ ரத்து செய்ய கோரியும் சிபிஎஸ் திட்டத்தில் இருந்த ஓய்வு பெற்ற அரசு ஊழியர் ஆசிரியர் குடும்பத்தினருக்கு பணிக்கொடை வழங்க கோரி CPS மாநில ஒருங்கிணைப்பாளர் செல்வகுமார் தலைமையில் மாநில அளவிலான உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது.

சங்க நிர்வாகிகள் பங்கேற்பு

உண்ணாவிரத போராட்டத்தில் முன்னாள் பொதுச் செயலாளர் முத்துசாமி கலந்துகொண்டு உரையாற்றினார். மேலும்,வானிலை இணை ஒருங்கிணைப்பாளர் ஜான்சன் சகாயநாதன் முன்னிலை வகித்தார், இந்த போராட்டத்தில் சிபிஎஸ் சங்க நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டதுடன் சிபிஎஸ் திட்டத்தில் பணிபுரிந்து இறந்தவர்களின் குடும்ப உறுப்பினர்களும் பங்கேற்றனர்.