கை அகற்றப்பட்ட குழந்தை உயிரிழந்தது வேதனை அளிக்கிறது - டிடிவி தினகரன்

ttv dinakaran

தனது குழந்தைக்கு தவறான சிகிச்சை அளித்ததன் காரணமாக தனது குழந்தையின் ஒரு எடுக்கப்பட்டுள்ளதாக பெற்றோர் குற்றம்சாட்டிய நிலையில், அக்குழந்தை உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக  அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் வெளியிட்டுள்ள செய்தி அறிக்கையில் கூறியிருப்பதாவது;  சென்னை எழும்பூர் அரசு மருத்துவமனையில் கை அகற்றப்பட்ட குழந்தை, சிகிச்சை பலனின்றி உயிரிழந்த செய்தி  வேதனை அளிக்கிறது. 

மேலும் துன்பத்தில் ஆழ்த்துவதுபோல் 

மருத்துவர்களின் அலட்சியத்தால், மேற்சிகிச்சையின்போது குழந்தையின் கை அகற்றப்பட்டதாக குழந்தையின் பெற்றோர்கள் குற்றம்சாட்டியிருந்த நிலையில், இப்போது அந்த குழந்தை சிகிச்சை பலனின்றி உயிரிழந்திருக்கிறது.  மருத்துவத்துறை அதிகாரிகளும், அமைச்சரும் குழந்தை உயிரிழப்பு குறித்து  அளித்துள்ள பதில் ஏற்கனவே துன்பத்தில் உள்ள பெற்றோரை மேலும் துன்பத்தில் ஆழ்த்துவதுபோல் உள்ளது. 

காரணமானவர்கள் மீது நடவடிக்கை

உயிரிழந்த குழந்தையின் பெற்றோருக்கு இழப்பீடு வழங்க நடவடிக்கை எடுப்பதுடன், பெற்றோரின் குற்றச்சாட்டை உரிய விசாரணை  நடத்தி காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்துகின்றேன். என அவர் அந்த செய்தி குறிப்பில் கூறியுள்ளார்.