ஹூக்கா பார் - உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு.!

website post - 2023-04-08T152144

விதிமுறைகளைப் பின்பற்றி ஹூக்கா விற்பனை செய்தால் காவல்துறை தலையிட முடியாது என்று உயர்நீதிமன்றம் அதிரடியாக உத்தரவிட்டுள்ளது. 

ஹூக்கா விற்பனையில் காவல்துறை தொந்தரவு செய்வதாக சென்னை தி.நகரைச் சேர்ந்த மோகன் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்திருந்தார். இந்தநிலையில், அந்த வழக்கு நீதிபதி சந்திரசேகர் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. விசாரணையில், ஹூக்கா புகைப்பதற்கு தனி இடம் ஒதுக்கி 21 வயதிற்கு மேல் உள்ளவர்கள் மட்டுமே அனுமதி என்று மனுதாரர் தரப்பில் வாதிடப்பட்டது. மேலும், விதிகளை முறையாக பின்பற்றி வரும் நிலையிலும் காவல்துறை தொந்தரவு செய்கிறது சென்று வாதிடப்பட்டது.

மனுதாரரின் வாதங்களை கேட்ட நீதிபதி சந்திரசேகர், சட்ட விதிகளை பின்பற்றி ஹூக்கா விற்பனை செய்யும் போது காவல்துறை தலையிட முடியாது என்றும், ஒருவேளை சட்ட விதிகள் மீறப்பட்டால் காவல்துறை சட்டப்படி நடவடிக்கை எடுக்கலாம் என்றும் உத்தரவிட்டுள்ளது.