வருடத்திற்கு 5000 புதிய பேருந்துகளை வாங்கும் திட்டத்தை கொண்டு வந்தது திமுக தான் - அமைச்சர் கே என் நேரு 

kn nehru

திருச்சி மலைக்கோட்டை அருகே உள்ள தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக பணிமனையில் ஓய்வு பெற்ற பணியாளர்களுக்கு ஓய்வு கால பணப்பலன்கள் வழங்கும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது - இதில் தமிழக நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என் நேரு,தமிழக போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர், தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

பணியாளர்களுக்கான பணப்பலன்கள்

இந்நிகழ்ச்சியில், தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் கும்பகோணம் கோட்டத்தில் பணியாற்றி ஓய்வு பெற்ற, விருப்ப ஓய்வு பெற்ற பணியாளர்கள், மேலும் போக்குவரத்து துறையில் பணியாற்றி இறந்த பணியாளர்களின் வாரிசுதாரர்களுக்கு பணப்பலன்கள் வழங்கப்பட்டது. மொத்தம் 669 பயனாளிகளுக்கு ரூ.196.47 கோடி மதிப்பீட்டிலான பணப்பலன்களை அமைச்சர் பெருமக்கள் வழங்கினர்.

இவ்விழாவில், சிறப்புரை ஆற்றிய போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் பேசியதாவது :  

போக்குவரத்து துறைக்கு பிதா மகன் முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்கள் தான். அவர் தான் இந்த துறைக்கு அடித்தளம். தமிழகத்தில் போக்குவரத்து துறையில் 1 லட்சத்து 45 ஆயிரம் பேர் அரசு பணியாளர்களாக உள்ளனர். இந்தியாவிலேயே அதிக எண்ணிக்கை உள்ள போக்குவரத்து கழகமாக நம் தமிழக போக்குவரத்து கழகம் உள்ளது. போக்குவரத்து துறை அமைச்சராக கே.என்.நேரு இருந்தபோது ஒவ்வொரு ஆண்டும் ஒவ்வொரு புதிய கோரிக்கையை முன் வைத்து அதனை சிறப்பாக செயல்படுத்தி இந்த துறைக்கு பல்வேறு சிறப்புகளை செய்தார்.

இலவச பேருந்துக்கான நிதியை முதலமைச்சரே தருகிறார்

21 ஆயிரம் பேருந்துகள் தமிழகத்தில் இயக்கப்படுகிறது - போக்குவரத்து துறையில் பணியாற்றும் பணியாளர்களுக்கு ஏதேனும் குடும்ப பிரச்சனை இருக்கலாம்,ஏதோ ஒரு இடத்தில் கோபம் அடைந்து எதாவது செய்து செய்துவிட்டால் - ஊடகங்களில் அந்த நாள் முழுவதும் 
அது சிறப்பு செய்தியாக மாறி விடுகிறது - எனவே ஊடக நண்பர்கள் இதனை கருத்தில் கொள்ள வேண்டும் என்று கேட்டுக்
கொள்கிறோம்.

அமைச்சர் நாங்கலெல்லாம் ஏசியில் செல்கிறோம். ஆனால் டிரைவர் கண்டக்டர்கள் அப்படி அல்ல. மிக மிக கடினமாக சூழல்களை கடந்து அவர்கள் பணி செய்கிறார்கள். அரசு துறைகளில் அதிகம் உடல் நலன் பாதிக்கப்படும் துறையாக போக்குவரத்து துறை தான் உள்ளது. தமிழகத்தில் பெண்களுக்கான இலவச பேருந்து பயனத்திற்கு முதலமைச்சர் முழுவதுமாக நிதியை தருவதால் எங்களுக்கு பிரச்சினை இல்லை.  

தொடர்ந்து விழா பேருரை ஆற்றிய அமைச்சர் கே.என் நேரு பேசியதாவது :

இன்று கும்பகோணம் கோட்டத்தில் தான் சிறப்பாக பணியாளர்கள் பணியாற்றி வருகின்றனர் என்று கூறுகிறோம் - நாளை மதுரைக்கு சென்றால் மதுரை கோட்டத்தில் பணியாற்றுபவர்கள் தான் சிறப்பாக பணியாற்றுகிறோம் என்போம் - இதை எல்லாம் பெரிது படுத்தக்கூடாது. போக்குவரத்து துறை தான் ஓயாமல் உழைக்கிறது என்கிறீர்களே ? நாங்கள் ஒரு நாள்  சுத்தம் செய்யவில்லை என்றால் உங்கள் போக்குவரத்து துறை எண்ணாகும் ? என கிண்டலாக பேசினார். தொடர்ந்து அவர் கூறியதாவது ; 

கலைஞர் காலத்தில் தான் அதிகமான பணியாளர்கள் நியமிக்கப்பட்டனர்

வருடத்திற்கு 5000 அரசு பேருந்துகள் நம் துறையின் கீழ் வாங்க வேண்டும் என்கிற திட்டத்தை கொண்டு வந்தது நாம் ஆட்சியில் இருந்த போது தான். கலைஞர் காலத்தில் தான் அதிகமான போக்குவரத்து துறை பணியாளர்கள் நியமிக்கப்பட்டனர். 15 ஆண்டுகளில் போக்குவரத்து துறையில் பணியாற்றும் பணியாளர்களுக்கு வருடம் தோறும் ஊதிய உயர்வு ஏற்படுத்தப்பட்டுள்ளது. தொழிலாளிகளின் ஓய்வுதிய பலன் பிரச்சினையை தீர்த்து வைத்துள்ளார்கள் - இது மிக மிக வரவேற்கதக்கது. ஓய்வூதிய பலன்களை அப்போது எல்லாம் 5 வருடம் கூட கொடுக்க முடியாத நிலை எல்லாம் இருந்தது - ஆனால் தற்போது ஓய்வு பெற்று வீட்டிற்கு செல்லும் போதே வாங்கி விட்டு செல்லாலாம்.

 இந்நிகழ்ச்சியில், போக்குவரத்துக் கழக நிர்வாகிகள், ஊழியர்கள், மற்றும் போக்குவரது ஊழியர்களின் குடும்பத்தினர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.