கோலாலம்பூர், சிங்கப்பூர் மற்றும் துபாயிலிருந்து வரும் விமானங்களில் சட்டவிரோதமாக தங்கம் கடத்தப்படுவதாக திருச்சி விமான நிலைய சுங்கத்துறை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்படி திருச்சி விமான நிலையத்திற்கு வந்த பயணிகளிடம் அதிகாரிகள் சோதனை நடத்தினர். அதில், 8 பயணிகளின் உடைமைகளில் இருந்த வாசனை திரவியம் தெளிக்கும் பாட்டில்கள், பெண்களின் கைப்பை மற்றும் உணவுப்பொருளில் மறைத்து வைத்து எடுத்து வந்த தங்க தகடுகள் மற்றும் மெல்லிய தண்டு வடிவிலான 24 காரட் தூய்மையான 1313.00 கிராம் தங்கமும், 22 காரட் தூய்மையான 25.00 கிராம் தங்கம் என மொத்தம் 1.3 கிலோ எடையுள்ள தங்கத்தை பறிமுதல் செய்தனர். இதன் மதிப்பு ரூ. 79.12 லட்சம் ஆகும் மேலும் தங்கம் கடத்தி வந்த விமான பயனர்களிடம் சுங்கத்துறை அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருச்சி விமான நிலையத்தில் வாசனை திரவிய பாட்டிலில் கடத்திய 1.3 கிலோ தங்கம் பறிமுதல்.
- Published:
- 08, Jul 2023
Related News
தமிழ்நாடு அரசுக்கு தொழில் முனைவோர் மன்றம் பாராட்டு.!
Wednesday, 01 Nov, 2023
'கேங்மேன்' பணிக்கு பணி நியமன ஆணை வழங்குக.. ஓபிஎஸ் வலியுறுத்தல்.!
Friday, 22 Sep, 2023