கருணை அடிப்படையில் பணி நியமன ஆணைகளை வழங்கிய அமைச்சர் கே.என்.நேரு

KN nehru

நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையில் பணிபுரிந்து பணியின்போது உயிரிழந்த பணியாளர்களின் வாரிசுதாரர்கள் கருணை அடிப்படையிலான பணி நியமனத்திற்கு கோரிக்கை விடுத்து வந்தனர். இதனையடுத்து நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல்துறையின் சார்பில் 143 பேருக்கு பணி நியமன ஆணைகளை வழங்க ஏற்பாடு செய்யப்பட்டது.

இந்நிலையில், சென்னை தலைமை செயலகத்தி நடந்த நிகழ்ச்சின்போது நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல்துறையில் பல்வேறு வளர்ச்சிப் பணிகளை தொடங்கி வைத்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 143 பேருக்கு பணி நியமன ஆணைகளை வழங்குவதன் அடையாளமான 15 பேருக்கு கருணை அடிப்படையிலான பணி நியமன ஆணைகளை வழங்கினார். இதனையடுத்து சென்னை எம்.ஆர்.சி நகரில் உள்ள நகராட்சி நிர்வாக இயக்குநரகத்தில் நடந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு மீதமுள்ள 128 பணியாளர்களின் வாரிசுதாரர்களுக்கு பணி நியமன ஆணைகளை வழங்கினார். இந்நிகழ்ச்சியில் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல்துறை இயக்குனர் உள்ளிட்ட அரசு அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.