ஜனவரி 18 லீவு இல்லப்பா… அமைச்சர் சொன்னது என்ன? 

anbil mahesh poyyamozhi

ஜனவரி 18ம் தேதி பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கவில்லை என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார். 

பொங்கல் கொண்டாட்டம்

தமிழர் திருநாள் பொங்கலை முன்னிட்டு பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு கடந்த 15 ஆம் தேதி முதல் 17 ஆம் தேதி வரை விடுமுறை என்று பள்ளிக்கல்வித்துறை அறிவித்து இருந்தது. 

தைப்பொங்கலுக்காக 15ம் தேதியும், திருவள்ளுவட் தினம் மற்றும் மாட்டுப் பொங்கலுக்காக 16ம் தேதியும் காணும் பொங்கலுக்காக 17ம் தேதியும் என்று தொடர்ந்து 3 நாட்கள் விடுமுறை அறிவிக்கப்பட்டது. 

18ம் தேதி விடுமுறை சர்ச்சை

ஜனவரி 18ம் தேதியும் விடுமுறை வழங்கப்படும் என்ற செய்தி சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவ, பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் இச்செய்தி உண்மையா பொய்யா என்று குழப்பத்தில் இருந்து வந்தனர். இதனால் பல பெற்றோர்களும் தங்கள் பிள்ளைகளின் பள்ளி மற்றும் கல்லூரி ஆசியர்களை தொடர்புக் கொண்டு இச்செய்தி உண்மை தானா என்று கேட்டுள்ளனர். 
இதனைத் தொடர்ந்து ஒரு குழப்பம் நீடித்துக் கொண்டே இருந்தது.  

அமைச்சர் விளக்கம் 

இந்நிலையில், வரும் 18-ம் தேதி (புதன் கிழமை) பள்ளிகளுக்கு விடுமுறை இல்லை என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.

பொங்கலுக்கு பின் புதன்கிழமை விடுமுறை அளிப்பது குறித்து அரசு எந்தவித  முடிவும் எடுக்கப்படவில்லை என்றும் அதனால் மாணவர்கள் எவ்வித குழப்பமும் இல்லாமல் இருக்கலாம் என்று அவர் கூறினார்.