மணிப்பூர் விவகாரம் - எதிர்கட்சிகளின் கடும் அமளியால் 8 வது நாளாக முடங்கிய நாடாளுமன்றம்

indian parliament

விஸ்வரூபம் எடுக்கும் மணிப்பூர் விவகாரம் 

மணிப்பூர்  விவகாரம் தற்போது விஸ்வரூபம் எடுத்துள்ள நிலையில், மத்திய அரசுக்கு எதிராக எதிர்கட்சிகள் கடும் கண்டனங்களை தெரிவித்து வருகின்றன. இந்நிலையில், நாடாளுமன்றத்தில் மழைக்கால கூட்டுத் தொடர் தொடங்கியது முதல் எதிர் கட்சிகள் கடும் அமளியில் ஈடுபட்டு வருகின்றன. இதனால் நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் அடிக்கடி ஒத்தி வைப்பது வழக்கமாகியுள்ளது. 

எதிர்கட்சிகள் கடும் கண்டனம்

இந்நிலையில், நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் இன்று காலை 11 மணிக்கு மீண்டும் கூடியது. மழைக்கால கூட்டத்தொடரின் 8-வது நாளான இன்று அவை கூடிய உடன் மணிப்பூர் விவகாரம் குறித்து விவாதிக்க வேண்டுமென கோரிக்கை வைத்து எதிர்க்கட்சிகள் கோஷம் எழுப்பின. இதனால், அவை நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டன.

8 வது நாளாக ஒத்திவைப்பு

இதனை தொடர்ந்து நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் ஒத்தி வைக்கப்பட்டுள்ளன. மக்களவை மதியம் 2 மணி வரை ஒத்திவைக்கப்படுவதாக சபாநாயகர் ஓம் பிர்லா தெரிவித்தார். அதேபோல், மாநிலங்களவை 12 மணி வரை ஒத்திவைக்கப்பட்ட நிலையில் மீண்டும் அவை கூடியபோது அமளி தொடர்ந்ததால் அவை மதியம் 2 மணி வரை ஒத்திவைக்கப்படுவதாக சபாநாயகர் ஜெகதீப் தங்கார் தெரிவித்தார்.