வீடு வீடாக வாக்கு சேகரித்த திமுக அமைச்சர் சி.வீ.மெய்யநாதன்

minister siva.v.meyyanathan

தேர்தல் பரப்புரையில் தீவிரம் காட்டும் கட்சிகள்

ஈரோடு கிழக்குத் தொகுதி சட்டமன்ற இடைத்தேர்தலை முன்னிட்டு பல்வேறு கட்சியினர் அப்பகுதியில் முகாமிட்டு பரப்புரையில் ஈடுபட்டு வருகின்றனர். குறிப்பாக திமுக தலைமையிலான மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியின் அமைச்சர்கள் வீடு வீடாக சென்று வாக்கு சேகரிக்கும் பணியில் தீவிரம் காட்டி வருகின்றனர். இந்நிலையில், மாண்புமிகு சுற்றுச்சூழல் துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் மற்றும் திமுக செய்தி தொடர்பு துணைத் தலைவர் பி.டி.அரசகுமார் ஆகியோர் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்.  

கூட்டணி வேட்பாளருக்கு ஆதரவு திரட்டிய திமுக

34 வது வார்டுக்கு உட்பட்ட பகுதிகளில் பொதுமக்களை சந்தித்த மாண்புமிகு அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் அவர்கள் மதசார்பாற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் அவர்களை ஆதரித்து வாக்கு சேகரித்தார்.  இந்த வாக்கு சேகரிப்பின்போது மாநில விவசாய தொழிலாளர் அணி துணைத் தலைவர் சந்திரசேகரன் மற்றும் ஈரோடு மதன்மோகன் ஆகியோர் உடனிருந்தனர்.