புதிதாக பதவியேற்ற சித்தராமையா, டி.கே.சிவகுமாருக்கு மோடி வாழ்த்து

modi wishes

மீண்டும் ஆட்சியமைத்த காங்கிரஸ் 

அண்மையில் நடைபெற்ற கர்நாடகா சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சியானது 135 தொகுதிகளை கைப்பற்றி அருதிப்பெரும்பானமையுடன் ஆட்சியை கைப்பற்றியது. இதனையடுத்து முதலமைச்சர் பதவியேற்பதில், காங்கிரஸ் மூத்த தலைவர்களான சித்தராமையாவுக்கும், டி.கே.சிவகுமாருக்கும் இடையே போட்டி நிலவி வந்த நிலையில், டெல்லியில் உள்ள தலைமை அலுவலகத்தில் காங்கிரஸ் தலைவர்களுடன் ஆலோசனை நடைபெற்றது. ஆலோசனை முடிவில், முதலமைச்சராக சித்தராமையாவும், துணை முதலமைச்சராக டி.கே.சிவகுமாரும் தேர்ந்தெடுக்கப்பட்டனர். 

ஆளுநர் முன்னிலையில் பதவியேற்பு

இதனையடுத்து பதவியேற்பு விழா இன்று கோலாகலமாக நடைபெற்றது. இதற்காக கர்நாடகாவின் பெங்களூருவில் கன்டீரவா ஸ்டேடியத்தில் பதவியேற்பு விழாவுக்கான ஏற்பாடுகள் சிறப்பாக நடைபெற்றன. அம்மாநில ஆளுநர் தாவர்சந்த் கெலாட் முன்னிலையில், இருவரும் பதவி பிரமாணம் மற்றும் ரகசிய காப்பு பிரமாணம் ஆகியவற்றை எடுத்துக் கொண்டனர். 

வாழ்த்து தெரிவித்த மோடி

இந்த நிலையில் முதலமைச்சராக பதவியேற்றுள்ள சித்தராமையா மற்றும் துணை முதலமைச்சராக பதவியேற்றுள்ள டி.கே சிவக்குமார் ஆகியோருக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், "கர்நாடக முதல்வராக பதவியேற்றுள்ள சித்தராமையா மற்றும் துணை முதல்வராக பதவியேற்றுள்ள டி.கே.சிவகுமாருக்கு வாழ்த்துக்கள். சிறப்பான பதவிக்காலம் அமைய எனது வாழ்த்துக்கள்" என்று கூறியுள்ளார்.