இருசக்கர வாகனத்திலிருந்து ரூ.36 ஆயிரம் பணம் திருடிய மர்ம நபர்கள்

money theft

வங்கியில் பணம் எடுத்த வியாபாரி

கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அய்யனார் கோவில் தெருவை சேர்ந்த வெங்கடேசன். (வயது 43) இவர் மூங்கில் பாடி செல்லும் சாலையில் உள்ள தனியார் காம்ப்ளக்ஸில் செருப்பு விற்பனை செய்யும் கடை நடத்தி வருகிறார். இந்த நிலையில் நேற்று தனக்கு சொந்தமான ஸ்கூட்டியை எடுத்துக்கொண்டு பழைய பேருந்து நிலையம் அருகே உள்ள வங்கியில் பணம் எடுப்பதற்காக ஸ்கூட்டியை  நிறுத்திவிட்டு உள்ளே சென்றுள்ளார். பின்னர் வெளியே வந்து பார்த்த பொழுது ஸ்கூட்டியின் டிக்கி உடைந்து இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். பின்னர் ஸ்கூட்டியின் டிக்கியை திறந்து பார்த்தபோது அதிலிருந்து 36 ஆயிரம் பணம் இல்லாததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். 

சிசிடிவியில் பதிவான மர்மநபர்கள்

பின்னர் இதுகுறித்து சின்ன சேலம் காவல் நிலையத்தில் தனது பணத்தை கண்டுபிடித்து தருமாறு வெங்கடேசன் புகார் கொடுத்தார்.புகாரின் அடிப்படையில் வழக்கை பதிவு செய்த சின்ன சேலம் போலீசார் திருட்டு குறித்து விசாரணை மேற்கொண்டு வந்தார் அப்பொழுது பேங்கில் உள்ள சிசிடிவியை ஆய்வு செய்தபோது அதில்  வெங்கடேசக்கு சொந்தமான ஸ்கூட்டியின் டிக்கியை உடைத்து இரண்டு இளைஞர்கள் பணம் எடுக்கும் காட்சி பதிவாகியிருந்தது. இந்த சிசிடிவி காட்சியை வைத்து அந்த இரண்டு இளைஞர்கள் யார் என்பது குறித்து போலீசார் தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.