நடிகர் வடிவேலுவின் தாயார் மறைவு - இரங்கல் தெரிவித்த முதலமைச்சர்

vadivelu

நடிகர் வடிவேலுவின் தாயார் சரோஜினி அம்மாள் மறைவிற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். 

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட வடிவேலு தாயார்

தமிழ் திரையுலகின் முன்னணி நகைச்சுவை நடிகராக வலம் வருபவர் நடிகர் வடிவேலு. வடிவேலுவின் தாயார் சரோஜினி (எ) பாப்பா அவர்களுக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டதை அடுத்து கடந்த சில நாட்களாக   மதுரை அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் உடல்நிலை மிகவும் மோசமடைந்ததை அடுத்து நேற்று  திடீரென காலமானார். இதனை நடிகர் வடிவேலு உறுதிபடுத்தியுள்ள நிலையில், பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள், திரை பிரபலங்கள், ரசிகர்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். 

தொலைபேசி வாயிலாக முதல்வர் ஆறுதல்

இந்த நிலையில், நடிகர் வடிவேலுவின் தாயார் சரோஜினி அம்மாள் மறைவிற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொலைபேசி வாயிலாக ஆறுதல் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், நடிகர் வடிவேலு அவர்களின் அன்புத்தாயார் திருமதி. சரோஜினி அம்மாள் (எ) பாப்பா அவர்கள் மதுரை விரகனூரில் உடல்க்குறைவு காரணமாக இயற்கை எய்தினார் என்ற செய்தி அறிந்து மிகவும் வருத்தமுற்றேன். ஆளாக்கி அழகு பார்த்த அன்னையின் மறைவு என்பது எந்த ஒரு மகனுக்கு ஈடுசெய்ய இயலாத இழப்பாகும். 'வைகைப் புயல்' நடிகர் வடிவேலு அவர்களுக்கும் அவர்தம் குடும்பத்தினருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக்கொள்கிறேன். என்று கூறியுள்ளார்.