தமிழ் சினிமாவின் லேடி சூப்பர்ஸ்டாரான நயன்தாரா ஏ.ஆர். முருகதாஸை பழிவாங்க செய்த விஷயம் என்ன தெரியுமா?
நயன்தாரா
தமிழ் சினிமாவில் முன்னனி நடிகையாக வலம் வருபவர் நடிகை நயன்தாரா. தன் தனிப்பட்ட வாழ்க்கையிலும், தன் தொழிலிலும் மிகவும் சந்தோஷமாக இருந்துக் கொண்டிருக்கிறார். காதல் சர்ச்சைகளில் சிக்கினாலும், மனம் தளராமல் இன்று தான் காதலித்தவரையே மணந்து இரண்டு குழந்தைகளுக்கு தாயாகியுள்ளார்.
நயனை பற்றி அனைவருக்கும் பல விஷயங்கள் தெரிந்திருந்தாலும் இதுவரைக்கும் நமக்கு தெரியாத ஒருசில விஷயங்கள் உள்ளது. அப்படி நயன் குறித்து அண்மையில் வைரலாகிக் கொண்டிருக்கும் விஷயம் தான் ஏ.ஆர்.முருகதாஸை பழிவாங்க நயன்தாரா செய்த செயல். கிறது. ஒட்டுமொத்த சினிமாவுமே விரட்டியடித்த ஒரு இயக்குனருக்கு வாழ்க்கை கொடுத்த சம்பவம் தான் அது.
ஏ.ஆர்.முருகதாஸ் செய்த துரோகம்
முதன் முதலில் அஜித்தை வைத்து தீனா படம் எடுத்து தமிழ் சினிமாவிற்குள் வெற்றி இயக்குனராக நுழைந்தவர் ஏ.ஆர்.முருகதாஸ். அதன் பிறகு மீண்டும் அஜித்தை வைத்து மீண்டும் ஒரு திரைப்படம் எடுக்க வேண்டும் என்று ஏ.ஆர். முருகதாஸ் போராடியுள்ளார். ஆனால் அவரிடம் கதை இல்லை. அப்போது அவருக்கு அறிமுகமானவர் தான் கோபி நயினார்.
ஒரு உதவி இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸிடம் ஒரு கதையை சொல்லி அஜித்தை வைத்து எடுத்தால் சரியாக வரும் என கோபி நயினார் கூறியிருக்கிறார். அந்தக் கதையை வைத்து நீண்ட நாள்களாக ஆலோசனைகளும் செய்து ஸ்கிரீன் ப்ளே வரை சென்றுள்ளனர். படம் எடுக்க தேவையான அனைத்து விடயங்களும் முடிந்ததும், கோபியை ஏ.ஆர்.முருகதாஸ் விரட்டியடித்திருக்கிறார்.
சிறிது நாட்களுக்கு பிறகு பார்த்தால் ஏ.ஆர் முருகதாஸ் விஜயை வைத்து ‘கத்தி’ படம் எடுக்க, அதன் டிரெய்லரை பார்த்த கோபி நயினாருக்கோ ஷாக். ஏனெனில் கத்தி படத்தின் கதையை தான் முருகதாஸிடம் கோபி சொல்லி உள்ளார்.
கோபி நயினார் போட்ட வழக்கு
தன் கதையை திருடி தான் கத்தி படத்தை எடுத்திருக்கிறார் முருகதாஸ் என்று கோபி நயினார் வழக்க்ய் தொடுத்துள்ளார். ஆனால் அந்த கதையை எந்த கவுன்சிலிலும் கோபி நயினார் பதிவு செய்யவில்லை என்பதால் அவருக்கு ஆதரவாக யாரும் நிற்க வில்லை. ஒரு வழியாக கோபி நயினாருக்கு ஆதரவாக தீர்ப்பு வந்ததும், ஒரு குறிப்பிட்ட தொகையை முருகதாஸ் கோபி நயினாரிடம் கொடுத்து விட்டார்.
நயன் எடுத்த முடிவு
அதன் பின் கோபி நயினாரை போனில் அழைத்த நயன் எனக்கு ஒரு கதை சொல்லுங்கள் எனவும் அதை நான் தயாரிக்கிறேன் எனவும் எந்த ஹீரோ வேண்டுமோ நீங்களே சொல்லுங்கள் எனவும் கூறியிருக்கிறார். அதற்கு கோபி நயினார், “ எனக்கு யாரும் வேண்டாம் , நீங்கள் தான் ஹீரோ, நீங்கள் தான் கதாநாயகன்” என்று சொல்லி ஆரம்பிக்கப்பட்ட படம் தான் ‘அறம்’. அந்தப் படம் நயன் கெரியரில் மிகப்பெரிய திருப்பு முனையை ஏற்படுத்தியது.
ஏன் நயன் கோபியை அழைத்தார்?
நயன்தாரா தன்னுடைய கெரியர் ஆரம்பத்தில் நடித்த படம் தான் ‘கஜினி’. அந்தப் படத்தில் நயனுக்கு தான் முக்கியமான ரோல் என்று சொல்லி நயனின் கால்ஷீட்டை வாங்கியுள்ளார் ஏ.ஆர்.முருகதாஸ். ஆனால், படம் வெளியான பிறகு தான் தனக்கு எந்த ஸ்கோப்பும் இல்லை என்று நயனுக்கு தெரிய வந்துள்ளது. அதன்பிறகு ஏ.ஆர்.முருகதாஸ் நடிக்க அழைத்தாலும் நயன் தட்டிக்கழித்துள்ளார். ஆனால், எப்படியாவது வாய்ப்பு கிடைக்கும் போது ஏ.ஆர்.முருகதாஸை பழிவாங்க வேண்டும் என்று எண்ணிய நயனுக்கு பல ஆண்டுகள் கழித்து கிடைத்த வாய்ப்பு தான் கோபி நயினார்.
மீண்டும் ஏமாற்றிய ஏ.ஆர்.முருகதாஸ்!
என்னடா நம்மை பழிவாங்க நயன் இறங்கிவிட்டாரே என்று எண்ணிய ஏ.ஆர்.முருகதாஸ், நயனிடம் சென்று மன்னிப்புக் கேட்டுள்ளார். அதன்பிறகு தான் ஏ.ஆர்.முருகதாஸின் ‘தர்பார்’ படத்தில் நடிக்க ஒத்துக் கொண்டுள்ளார் நயன். ஆனால், மன்னிப்பு கேட்பது போல் கேட்டு மீண்டும் ஸ்கோப்பே இல்லாத ரோல் கொடுத்துள்ளார் ஏ.ஆர்.முருகதாஸ். இதனால் ஏ.ஆர்.முருகதாஸ் மீது மீண்டும் அப்செட் ஆகியுள்ளார் நயந்தாரா.