பிரபல கவர்ச்சி நடிகையை பழிவாங்கினாரா ஜாக்குலின்.. என்ன நடந்தது?

nora fatehi

திட்டமிட்டே தன்னை மோசடி வழக்கில் சிக்க வைத்துள்ளார் என ஜாக்குலின் ஃபெர்னாண்டஸ் மீது பிரபல கவர்ச்சி நடிகை நோராஹ் ஃபதேயி குற்றஞ்சாட்டியுள்ளார். 

பணமோசடி வழக்கு

200 கோடி ரூபாய் பணமோசடி செய்த வழக்கில் கைதான பெங்களூருவைச் சேர்ந்த இடைத்தரகர் சுகேஷ் சந்திரசேகர், தற்போது திகார் சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார். சுகேஷின் இந்த மோசடியில் பிரபல இந்தி நடிகை ஜாக்குலின் ஃபெர்னாண்டஸிற்கும் தொடர்பு இருப்பதாக அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்து விசாரித்தது. 

அதோடு அமலாக்குத்துறை தாக்கல் செய்த குற்றப்பத்திரிக்கையில், “மோசடி பணத்தில் சுகேஷ் சந்திரசேகர் ரூ.7 கோடி மதிப்பிலான நகைகள் மற்றும் பரிசு பொருட்களை நடிகை ஜாக்குலினுக்கு வாங்கி கொடுத்துள்ளார். சுகேஷ் சந்திரசேகரின் மோசடிகள் தெரிந்தே அவருடன் பழகி பரிசு பொருட்களை அவர் பெற்றுள்ளார்” என்று குற்றப்பத்திரிக்கையில் தெரிவிக்கப்பட்டு இருந்தது. 

நடிகை நோராஹ் ஃபதேயி

இந்நிலையில், ஜாக்குலின் ஃபெர்னாண்டஸ் போல பிரபல கவர்ச்சி நடிகை நோராஹ் ஃபதேஹியும் சுகேஷ் சந்திரசேகரிடம் இருந்து ரூ.1 கோடி கார் உள்ளிட்ட பரிசு பொருட்கள் பெற்றதாக அமலாக்கத்துறை குற்றம் சாட்டி சம்மன் அனுப்பியது. 

சிக்க வைக்கப்பட்டுள்ளேன்

அமலாக்கத்துறை விசாரணைக்கு ஆளான நோரா ஃபதேயி, ஜாக்குலின் மீது நீதிமன்றத்தில் அவதூறு வழக்கு தொடர்ந்துள்ளார். 

இதுகுறித்து நோரா தாக்கல் செய்துள்ள மனுவில், '' மாடலிங் துறையிலும், சினிமாவிலும் எனது வளர்ச்சி பிடிக்காமல் சதி செய்தே என் மீது களங்கம் ஏற்படுத்தும் நோக்கிலே திட்டமிட்டு பணமோசடி வழக்கில் ஜாக்குலின் ஃபெர்னாண்டஸ் சிக்க வைத்துள்ளார். என்னுடன் நேரடியாக மோத அவருக்கு தைரியம் இல்லை, அதனால்தான் இதுபோன்ற செயல்களில் ஜாக்குலின் ஈடுபடுகிறார்" என்று கூறியுள்ளார்.