2-வது காதலனுடன் சேர்ந்து முதல் காதலனுக்கு நிர்வாண சித்ரவதை - கல்லூரி மாணவி கைது

college girl arrested at kerala

முதல் காதலனை மறந்த கல்லூரி மாணவி

கேரள மாநிலம் வர்க்கலா செர்னியூரை சேர்ந்த லட்சுமி பிரியா (19) என்பவர் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வருகிறார். லட்சுமி பிரியாவுக்கும் அதே பகுதியை சேர்ந்த 19 வயது வாலிபருக்கும் காதல் மலர்ந்ததுள்ளது. இந்த நிலையில் லட்சுமி பிரியாவுக்கு கல்லூரியில் படிக்கும் இன்னொரு மாணவருடன் தொடர்பு ஏற்பட்டது. இதனால் முதல் காதலனை சந்திப்பதை தவிர்த்தார். இதனால் மனம் உடைந்த முதல் காதலன், லட்சுமி பிரியாவை சந்தித்து தன்னுடனான காதலை தொடருமாறு வற்புறுத்தி வந்துள்ளார். 

நிர்வாணமாக்கி சிகரெட்டால் சூடு வைத்த கல்லூரி மாணவி

இரண்டாவது காதலன் மீதான மோகத்தில் முதல் காதலனை மறந்த லட்சுமி பிரியா, அவரை தன்னுடன் பேச வேண்டாம் எனவும் கூறி மிரட்டல் விடுத்துள்ளார். ஆனால் முதல் காதலன் லட்சுமி பிரியாவை தொடர்ந்து சந்திக்க முயன்றார். இதில் ஆத்திரம் அடைந்த லட்சுமி பிரியா முதல் காதலனை நேரில் சந்திக்க வருமாறு அழைத்துள்ளார். அவரது பேச்சை நம்பி லட்சுமி பிரியா அழைத்த இடத்திற்கு சென்ற முதல் காதலனை, லட்சுமி பிரியாவும், அவரது 2-வது காதலனும் தனது கூட்டாளிகளுடன் துணையுடன் சரமாரியாக தாக்கியுள்ளனர். இதனை தொடர்ந்து முதல் காதலனை காரில் கடத்தி  சித்ரவதை செய்தனர். அவரை நிர்வாணமாக்கி சிகரெட்டால் உடல் முழுவதும் சூடு போட்டனர். பின்னர் அவரது செல்போனை பறித்து கொண்டு கையில் இருந்த ரொக்கப்பணத்தையும் எடுத்து கொண்டு தப்பி சென்று விட்டனர். 

சாலையில், மயங்கி கிடந்த முதல் காதலன்

இதற்கிடையே மகனை காணவில்லை என அவரது தந்தை போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து தேடிய போது, அவர் உடல் முழுவதும் காயங்களுடன் சாலையில் விழுந்து கிடந்தது தெரியவந்தது. அவரை மீட்டு ஆஸ்பத்திரியில் சேர்த்த போலீசார் சம்பவம் குறித்து விசாரணை நடத்தினர். இதில் அவரை முன்னாள் காதலி, அவரது 2-வது காதலனுடன் சேர்ந்து கடத்தி சென்று சித்ரவதை செய்தது தெரியவந்தது. இதையடுத்து லட்சுமி பிரியாவை பிடிக்க போலீசார் முயற்சி மேற்கொண்டனர். அவரது செல்போன் சிக்னல் மூலம் அவர் எர்ணாகுளம் பகுதியில் பதுங்கி இருப்பதை அறிந்த போலீசார் இன்று அவரை அதிரடியாக கைது செய்தனர். அவரது 2-வது காதலன் மற்றும் 4 கூட்டாளிகள் தலைமறைவாகி விட்டனர். அவர்களை போலீசார் தேடி வருகிறார்கள். 

மாணவியின் தாயார் பேட்டி

இந்த சம்பவம் குறித்து கைது செய்யப்பட்ட லட்சுமி பிரியாவின் தாயார் கூறியதாவது:- தாக்கப்பட்ட 19 வயது இளைஞனுக்கும் லக்ஷ்பிரியாவுக்கும் இடையில் காதல் இல்லை.அவர்கள் நண்பர்களாக இருந்தனர். அவர்கள் சம வயதுடைய நண்பர்கள். ஆனால் அந்த வாலிபர் காதலிக்க வேண்டும் என தொந்தரவு செய்து வந்துள்ளார். போனில் தவறாகப் பேசுவது, மோசமான வீடியோக்களும் அனுபபுவது என எனது மகள் தொடர்ந்து துன்புறுத்தப்பட்டு வந்தார்.இதைத் தொடர்ந்து, மற்ற நண்பர்களிடம் தனக்கு தொல்லை கொடுப்பதை நிறுத்துமாறு கூறியுள்ளார். தாக்குதல் நடத்த எதுவும் சொல்லவில்லை. இந்த தாக்குதலில் தனது மகளுக்கு எந்தப் பங்கும் இல்லை.இது எல்லாம் திட்டமிட்டு நடத்தப்பட்டது. கும்பல் தாக்கும் போது அவரை அடிக்க வேண்டாம் என எனது மகள் கூறி உள்ளார்.அந்த கும்பலில் உள்ளவர்களின் விவரம் தெரியவில்லை என அவரது தாயார் கூறியுள்ளார். முதுகில் வளையல்கள் மற்றும் மோதிரங்களால் தாக்கியதாகவும் மயக்கம் வரும் வரை அடிவயிற்றிலும் உதைத்ததாகவும் இதனை லக்ஷ்மிபிரியாவால் வீடியோ எடுத்ததாக பாதிக்கப்பட்ட வாலிபர் கூறி உள்ளார்.