திருச்சி காவிரி ஆற்றில் மூழ்கி இறந்தவர்களின் பெற்றோருக்கு நிவாரண நிதி

inigo irudhayaraj mla

மகன்களை பறிகொடுத்த பெற்றோர்

திருச்சி கிழக்கு தொகுதிக்குட்பட்ட வடக்கு தாராநல்லூர் கலைஞர் நகரை சேர்ந்தவர் திருநாவுக்கரசு. இவரது மனைவி ராஜாமணி. இவர்களது மகன்கள் தினேஷ்(21) மற்றும் ராஜேஷ் (16). கடந்த 04-07-2022 அன்று காவிரி ஆற்றில் குளித்த தினேஷ், ராஜேஷ் ஆகியோர் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தனர். இதை அறிந்த கிழக்குத் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் இனிகோ இருதயராஜ் உடனே நேரில் சென்று ஆறுதல் கூறினார்.

நிவாரண நிதி வழங்கிய எம்.எல்.ஏ

இந்நிலையில் காவிரி ஆற்றில் மூழ்கி உயிரிழந்தவர்களின் பெற்றோருக்கு முதலமைச்சர் நிவாரண நிதியிலிருந்து இன்று மாவட்ட ஆட்சியர் பிரதீப்குமார் முன்னிலையில் திருச்சி கிழக்குத் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் இனிகோ இருதயராஜ் நிவாரண நிதியை வழங்கினார். அப்போது திருச்சி மாநகராட்சி 8வது மண்டல தலைவர் மதிவாணன் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.