கடவுளை சந்தித்தேன் - நெகிழ்ந்து போன எஸ்.எஸ்.ராஜமௌலி

RRR

கோல்டன் குளோப் விருது விழாவில் ஹாலிவுட்டின் முக்கிய இயக்குனரை சந்தித்த ஆர்.ஆர்.ஆர் படகுழுவினர். 

மதிப்புமிக்க கோல்டன் குளோப்

ஆஸ்கார் விருதுக்கு அடுத்தபடியாக மதிப்புமிக்க விருதாக கோல்டன் குளோப் விருது கருதப்படுகிறது. தன் வாழ்நாளில் ஒருமுறையேனும் இந்த விருதை பெற வேண்டும் என்பதே திரைத்துறையை சார்ந்தவர்களின் கனவாக இருந்து வருகிறது. இந்நிலையில், சமீபத்தில் அமெரிக்காவில் நடந்த கோல்டல் குளோப் விருது விழாவில் ஹலிவுட் முதல் பல்வேறு நாட்டு திரை ஆளுமைகள் பலரும் கலந்து கொண்டனர். 

விருது பெற்ற நாட்டு நாட்டு பாடல் 

இதில், இந்தியாவிலிருந்து சிறந்த பாடலுக்காக ராஜமௌலி இயக்கிய ஆர்.ஆர்.ஆர் படத்தில் இடம்பெற்ற ”நாட்டு நாட்டு” பாடல் பரிந்துரைக்கப்பட்டு விருதும் பெற்றது. இதனையொட்டி பல்வேறு தரப்பினரும் அப்படத்தில் இயக்குனர் ராஜமௌலி மற்றும் இசையமைப்பாளர் கீரவாணி ஆகியோருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். இந்நிகழ்ச்சியில் ஆர்.ஆர்.ஆர் படத்தின் நடிகர்கள் ராம்சரன், ஜூனியர் என்.டி.ஆர். இயக்குனர் ராஜமௌலி, இசையமைப்பாளர் கீரவாணி ஆகியோர் பங்கேற்றனர். 

ஸ்டீஃபன் ஸ்பீல்பெர்க்கை சந்தித்த படக்குழு

இந்நிலையில், கோல்டன் குளோப் விருது நிகழ்ச்சியில் பங்கேற்றபோது ஹாலிவுட்டின் பிரபல இயக்குனர் ஸ்டீஃபன் ஸ்பீல்பெர்க்கை சந்தித்து பேசிய புகைபடத்தை தனது ட்விட்டர் பக்கத்தில் இயக்குனர் ராஜமௌலி பகிர்ந்திருந்தார். அதில், ”தான் கடவுளை சந்தித்தேன்” என குறிப்பிட்டுள்ளார். அதேப்போல, இசையமைப்பாளர் கீரவாணியும் ஹாலிவுட் இயக்குனர் ஸ்டீஃபன் ஸ்பீல்பெர்க்கை சந்தித்து பேசிய புகைப்படத்தை பதிவிட்டு, ”தன்னால் நம்ப முடியாத ஒரு தருணம்” என குறிப்பிட்டு தனது மகிழ்ச்சியை பகிர்ந்திருந்தார். ஸ்டீஃபன் ஸ்பீல்பெர்க்கை சந்தித்தது குறித்த ராஜமௌலி மற்றும் கீரவாணியின் பதிவுகளை அவரது ரசிகர்கள் தற்போது சமூக வலைதளங்களில் ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.