நடிப்புக்கு Goodbye… சாய்பல்லவி எடுத்த அதிரடி முடிவு என்ன?

sai pallavi

நடிகை சாய்பல்லவி சினிமாவில் இருந்து விலகப்போவதாக தகவல் வெளியாகியுள்ளதால் ரசிகர்கள் அதிர்ச்சியில் உள்ளனர். 

நடிகை சாய்பல்லவிக்கு கேரளா, தமிழ், தெலுங்கு என அனைத்து இடங்களிலும் ரசிகர்கள் பட்டாளம் என்பது எண்ணிலடங்காதவை. இவர் ஜார்ஜியாவில் மருத்துவ பட்டப்படிப்பு படித்திக்கொண்டிருந்த போதுதான் மலையாளத்தில் வெளியான ‘பிரேமம்’ திரைப்படத்தில் நடித்தார். தான் அறிமுகமான முதல் படத்திலேயே பலதரப்பு ரசிகர்களையும் கவர்ந்த இவர், அதன்பிறகு சினிமாவில் முன்னணி நடிகையாக உருவெடுத்தது மட்டுமல்லாமல் தன் பட்டப்படிப்பையும் நிறைவு செய்தார். 

அதன்பின் முழுநேரமாக சினிமாவில் கவனம் செலுத்திய இவர், அவ்வப்போது தான் படித்த படிப்பு வீணாகிவிட்டதே என்று கவலைக் கொண்டுதான் இருந்தார். இதனை பார்த்த ரசிகர்கள், நீங்கள் தொடர்ந்து நடித்துக் கொண்டே இருங்கள் என்று கோரிக்கை விடுத்திருந்தனர். 

இந்நிலையில், ரசிகர்களுக்கு அதிர்ச்சி அளிக்கும் வகையில் சாய்பல்லவி சினிமாவில் இருந்து விலக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 
 
இந்த தகவல் அதிகாரப்பூர்வ தகவல் இல்லை என்பதால் ரசிகர்கள் குழப்பத்தில் உள்ளனர். 

முழுவதுமாக சாய்பல்லவி சினிமாவில் இருந்து விலகிப்போகிறாரா அல்லது மருத்துவமனை கட்டிக்கொண்டு அதிலும் சினிமாவிலும் ஆர்வம் காட்டப்போகிறாரா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.