கிறிஸ்தவ பறையர்களுக்கு தனி இடஒதுக்கீடு -  கிறிஸ்துவ பறையர்கள் அமைப்பு கோரிக்கை

christian sc community

கோரிக்கை மாநாடு

திருச்சி மேலப்புதூர் பகுதியில் உள்ள தேவாலய அரங்கத்தில் வெள்ளாமை இயக்கத்தின் கிறிஸ்துவ பறையர்களின் கோரிக்கை மாநாடு.
ஒருங்கிணைப்பாளர்ஆர்.அந்தோணி, துணைச் செயலாளர் அகில ராஜ் ஆகியோர் தலைமையில் நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளர்களாக விடுதலை தமிழ் புலிகள் கட்சி தலைவர் குடந்தை அரசன், உச்சநீதி மன்ற வழக்கறிஞர் பிராங்கிளின் சீசர் தாமாஸ், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி அ.கா.தமிழாதன் பெரம்பலூர் நாடாளுமன்ற தொகுதி செயளாளர் , புல்லட் லாரன்ஸ் மாநகர மாவட்ட துணை செயளாளர், திருமா எரோனி மாவட்ட துணை அமைப்பாளர் இளம் சிறுத்தைகள் எழுச்சிபாசறை ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பு உரையாற்றினர்.

கிறிஸ்தவ பறையர்களுக்கு தனி இடஒதுக்கீடு

மேலும் கூட்டத்தின் தீர்மானமாக அரசியலில் கிறிஸ்தவ பறையர்களுக்கு, (பங்கு) தனி இடஒதுக்கீடு  அளிக்க வேண்டும்.  கிருஸ்தவர்களிள் அதிக என்னிக்கை கொண்ட திருச்சபையில் அதிக இட ஒதுக்கீடு வழங்கி கல்வி, வேலைவாய்ப்பு, கொடுத்திட வேண்டும். தமிழக அரசு கிருஸ்துவ பறையர்களுக்கு இருக்க இடம் இல்லாதவர்களுக்கு  இடம் வேண்டியும் வறுமையில் வாழும் மக்களுக்கு நிதி உதவி இயக்க வழியாக செய்திட வேண்டும், உள்ளிட்ட கோரிக்கைகளை தீர்மானமாக வலியுறுத்தினர். இந்த மாநட்டில், ஆண்கள் பெண்கள் குழந்தைகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.