ஸ்ரீரங்கம் கோயில் செயல் அலுவலராக சிவராம் குமார் இன்று பொறுப்பேற்றார்.

trichy srirangam

தமிழ்நாட்டின் பிரசித்தி பெற்ற திருத்தலங்களுள் ஒன்றான ஸ்ரீரங்கம் அருள்மிகு அரங்கநாதசுவாமி திருக்கோயிலுக்கு தினமும் ஏராளமான பக்தர்கள் வருகைதந்து சாமிதரிசனம் செய்வர். இக்கோவில், வரலாற்று அடையாளமாகவும் பார்க்கப்படுகிறது. இந்நிலையில் இக்கோவிலின் இணை ஆணையர் / செயல் அலுவலர் செ.மாரிமுத்து பழனி அருள்மிகு பாலதண்டாயுதபாணி திருக்கோவிலுக்கு இணை ஆணையர் / செயல் அலுவலராக பணியிடை மாற்றம் செய்யப்பட்டனர்.  இதனையடுத்து சிவகங்கை மாவட்ட துணை ஆணையர் ( சரிபார்ப்பு) பணியில் இருந்த எஸ்.சிவராம்குமார் இணை ஆணையாராக பதவி உயர்வு பெற்று ஸ்ரீரங்கம் கோவில் புதிய இணை ஆணையர் / செயல் அலுவலராக இன்று பொறுப்பேற்றுக் கொண்டார். அவருக்கு   கோவில் நிர்வாகிகள் பலரும் வாழ்த்து தெரிவித்தனர்.