தமிழ்நாட்டின் பிரசித்தி பெற்ற திருத்தலங்களுள் ஒன்றான ஸ்ரீரங்கம் அருள்மிகு அரங்கநாதசுவாமி திருக்கோயிலுக்கு தினமும் ஏராளமான பக்தர்கள் வருகைதந்து சாமிதரிசனம் செய்வர். இக்கோவில், வரலாற்று அடையாளமாகவும் பார்க்கப்படுகிறது. இந்நிலையில் இக்கோவிலின் இணை ஆணையர் / செயல் அலுவலர் செ.மாரிமுத்து பழனி அருள்மிகு பாலதண்டாயுதபாணி திருக்கோவிலுக்கு இணை ஆணையர் / செயல் அலுவலராக பணியிடை மாற்றம் செய்யப்பட்டனர். இதனையடுத்து சிவகங்கை மாவட்ட துணை ஆணையர் ( சரிபார்ப்பு) பணியில் இருந்த எஸ்.சிவராம்குமார் இணை ஆணையாராக பதவி உயர்வு பெற்று ஸ்ரீரங்கம் கோவில் புதிய இணை ஆணையர் / செயல் அலுவலராக இன்று பொறுப்பேற்றுக் கொண்டார். அவருக்கு கோவில் நிர்வாகிகள் பலரும் வாழ்த்து தெரிவித்தனர்.
ஸ்ரீரங்கம் கோயில் செயல் அலுவலராக சிவராம் குமார் இன்று பொறுப்பேற்றார்.
- Published:
- 05, Jun 2023
Related News
தமிழ்நாடு அரசுக்கு தொழில் முனைவோர் மன்றம் பாராட்டு.!
Wednesday, 01 Nov, 2023
'கேங்மேன்' பணிக்கு பணி நியமன ஆணை வழங்குக.. ஓபிஎஸ் வலியுறுத்தல்.!
Friday, 22 Sep, 2023