பாஜக எம்பியை கைது செய்ய கோரி தபால் நிலையத்தை முற்றுகையிட்ட மாணவர் அமைப்பினர்

trichy protest

மல்யுத்த வீராங்கனைகள் போராட்டம்

மல்யுத்த வீராங்கனைகள் மீதான டெல்லி காவல்துறையின் வன்முறை தாக்குதலை கண்டித்தும் பாலியல் தொடர்பில் குற்றம் சாட்டப்பட்ட ஒன்றிய பிஜேபி அமைச்சர் பிரிட்ஜ்  பூஷனை கைது செய்ய வலியுறுத்தியும் இளைஞர் மாணவர் பெருமன்றம், இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம், அகில இந்திய பெண்களை விடுதலை இயக்கம் உள்ளிட்ட அமைப்புகள் இணைந்து திருச்சியில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 

ஒன்றிய அரசுக்கு எதிராக முழக்கங்கள்

அப்போது ஒன்றிய அரசுக்கு எதிராக முழக்கங்களை எழுப்பியும், பிரிட்ஜ்  பூஷனை காப்பாற்ற துடிக்கும் ஆளும் பாஜக அரசுக்கு எதிரான வாசகங்கள் பொறித்த பதாகைகளை ஏந்தியும் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனை தொடர்ந்து ஆர்ப்பாட்டக்காரர்கள் திருச்சி தபால் நிலையத்தை முற்றுகையிட முயன்றனர். அப்போது அவர்களை காவல்துறை தடுத்து நிறுத்த முயன்றபோது மோதல் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து 50 பேரை காவல்துறையினர் கைது செய்தனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.