தமிழ்நாட்டில் புயல் எச்சரிக்கையை அடுத்து தென்மண்டல வானிலை ஆய்வு மைய இயக்குநருடன் தலைமை செயலாளர் ஆலோசனை மேற்கொண்டுள்ளார்.
வங்காள விரிகுடாவில் மையம் கொண்டுள்ள மாண்டஸ் புயல் மாமல்லபுரத்தில் இருந்து 180 கி.மீ. தூரத்தில் நிலை கொண்டுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.