அனைத்துப் பள்ளிகளிலும் இனி தமிழ் மொழி கட்டாயம் - பள்ளிக்கல்வித்துறை 

tn schools

தமிழை பயிற்றுவிக்க கோரிக்கை

தமிழ்நாட்டு பள்ளிகளில் தமிழ் மொழியை கட்டாயமாக்க பல்வேறு தரப்பினரும் அரசை வலியுறுத்தி வந்தனர்.  இது தொடர்பாக பள்ளிக்கல்வி இயக்குனருக்கு கோரிக்கைகள் அனுப்பப்பட்டு வந்தன. சென்னை, தமிழகத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் தமிழ் மொழி கட்டாய பயிற்று மொழியாக உள்ளது. அதே சமயம் சில தனியார் பள்ளிகள், மெட்ரிக் பள்ளிகளில் தமிழ் மொழி பயிற்று மொழியாக இல்லை என புகார்கள் எழுந்தன.

அனைத்து தனியார் பள்ளிகளிலும் தமிழ் கட்டாயம்

இந்நிலையில் அனைத்து தனியார் பள்ளிகளிலும் தமிழ் மொழியை கட்டாய பாடமாக்க உத்தரவிட்டு தனியார் பள்ளிகளின் இயக்குனர் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார். அதன்படி வரும் கல்வியாண்டில் 9-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்கள் தமிழை ஒரு பாடமாக படிப்பதை உறுதி செய்ய வேண்டும் எனவும், அரசின் திட்டத்தை அனைத்து தனியார் பள்ளிகளும் செயல்படுத்த வேண்டும் எனவும் உத்தரவிடப்பட்டுள்ளது.