சி ஐ டி யு திருச்சி தாலுகா பஞ்சாலை தொழிலாளர் சங்கத்தின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் இன்று நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் CITU திருச்சி தாலுகா பஞ்சாலை தொழிலாளர் சங்கம் சார்பில் திருச்சி ராம்ஜிநகர் ஸ்ரீ உமா பரமேஸ்வரி மில்ஸ் லிமிடெட் பஞ்சாலையில் பணிபுரிந்த 820 தொழிலாளர்களிடம் பிடித்தம் செய்த… பி.எப்./ கிராஜிவிட்டி, சொசைட்டி இவைகளுக்கு பிடித்தம் செய்த15 கோடி ரூபாயை தொழிலாளர்களுக்கு கிடைத்திட நடவடிக்கை எடுக்க கோரியும், ஸ்ரீ உமா பரமேஸ்வரி பஞ்சாலை நிறுவனத்திற்கு சொந்தமான நிலங்களை ஏலம் விட்டு பணத்தினை கட்ட தவறிய M/S. Phoenix ARC Private Ltd.,| நிறுவனத்தையும், இதற்கு ஆதரவாக செயல்படும் கலைத்தல் அதிகாரி (The Afficial Liquidation) அவர்களின் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க கோரியும் முழக்கங்கள் எழுப்பினர். கோரிக்கை பதாகைகளை கையில் ஏந்தியும் அந்த அமைப்பினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் பஞ்சாலை தொழிலாளர் சங்க செயலாளர் சங்கர் சிஐடியு மாவட்ட செயலாளர் ரெங்கராஜன், சிபிஎம் மாவட்ட செயலாளர் ராஜா ஆகியோர் கலந்து கொண்டு கண்டன உரையாற்றினார்கள்.
பஞ்சாலை தொழிலாளர் சங்கத்தினர் கண்டன ஆர்ப்பாட்டம்.
- Published:
- 06, Jun 2023
Related News
தமிழ்நாடு அரசுக்கு தொழில் முனைவோர் மன்றம் பாராட்டு.!
Wednesday, 01 Nov, 2023
'கேங்மேன்' பணிக்கு பணி நியமன ஆணை வழங்குக.. ஓபிஎஸ் வலியுறுத்தல்.!
Friday, 22 Sep, 2023