வரலாற்றை இந்திய பார்வையில் எழுத வேண்டிய தருணம் - அமித்ஷா 

amitsha

ஆங்கிலேயர்களை இந்தியாவில் இருந்து வெளியேற்றுவதற்கு அகிம்சை போராட்டங்கள் பெரிய அளவு உதவி செய்தது என்பதில் மாற்றுக்கருத்துக்கள் கிடையாது -அமித்ஷா 

டெல்லியில் நடந்த புத்தக வெளியீட்டு விழாவின் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கலந்து கொண்டார். இந்நிகழ்ச்சியில், சஞ்சீவ் சன்யாலின் "Revolutionaries, The other story of how India won its freedom" என்ற புத்தகத்தை அமித் ஷா வெளியிட்டு பேசினார். இந்நிகழ்ச்சியின்போது அமித்ஷா பேசியதாவது; ஆங்கிலேயர்களை இந்தியாவில் இருந்து வெளியேற்றுவதற்கு அகிம்சை போராட்டங்கள் பெரிய அளவு உதவி செய்தது என்பதில் மாற்றுக்கருத்துக்கள் கிடையாது. ஆனால் அதற்காக ஆயும் ஏந்திய போராட்டம் முக்கியமற்றது என்பதல்ல. இவ்வாறு ஆயும் ஏந்திய போராட்டங்கள் ஒழுங்கற்ற மற்றும் தனிநபர் போராட்டமாக சித்தரிக்கப்பட்டுள்ளது. அகிம்சை போராட்டத்தை நியாயப்படுத்த ஆயுதமமேந்திய போராட்டத்தை குறைத்து மதிப்பிடுவது சரியல்ல. இந்தியாவை பொறுத்த அளவில், இந்தியாவில் ஆயுதப்போராட்டங்கள் நியாயமான முறையில் எழுதப்படவில்லை. அதனால் இந்திய வரலாற்றை இந்தியப் பார்வையில் எழுத வேண்டிய தருணம். இவ்வாறு அவர் பேசினார்.