முறைகேடு வழக்கில் விசிக கவுன்சிலர்
திருச்சி மன்னார்புரத்தில் எல்ஃபின் என்ற எம்எல்எம் நிறுவனம் செயல்பட்டு வந்தது. இந்த நிறுவனத்தின் மீது முறைகேடு புகார் எழுந்த நிலையில், இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். இந்த மோசடி வழக்கில் திருச்சி மாநகராட்சி 17வது வார்டு விடுதலை சிறுத்தைகள் கட்சி கவுன்சிலர் பிரபாகரனுக்கும் தொடர்பிருப்பது தெரிய வந்தது. இதனையடுத்து பிரபாகரனை போலீசார் விசாரணைக்காக அழைத்துச் சென்ற நிலையில், அவரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.
பிரபாகரனை சிறையில் அடைந்த போலீசார்
மோசடி வழக்கு உறுதி செய்யப்பட்டதை அடுத்து நீதிமன்ற உத்தரவுபடி கவுன்சிலர் பிரபாகரனை போலீசார் மதுரை சிறையில் அடைத்தனர். ஏற்கனவே கடந்த சில மாதங்களுக்கு முன்பு இந்த மோசடி வழக்கு தொடர்பாக கவுன்சிலர் பிரபாகரன் வீட்டில் போலீசார் சோதனை நடத்தினர் என்பது குறிப்பிடத்தக்கது.