மீண்டும் தெலுங்கு இயக்குனரின் படத்தில் விஜய்..? 

vijay -gopichand

பிரபல தெலுங்கு இயக்குனரின் படத்தில் நடிக்க சம்மதம் தெரிவித்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. 

ஒரே சந்திப்பில் ஓகே சொன்ன விஜய் 

தமிழ் திரையுலகின் பிரபல நடிகராக இருக்கும் விஜய் சமீபத்தில் தெலுங்கின் பிரபல இயக்குனரான வம்சி பைடிபள்ளி இயக்கத்தில் வாரிசு படத்தில் நடித்திருந்தார். இந்த படம் கடந்த பொங்கல் அன்று வெளியான நிலையில், லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் லியோ படத்தில் விஜய் தற்போது நடித்து வருகிறார். இந்நிலையில் தெலுங்கில் பிரபல இயக்குனராக இருக்கும் கோபிசந்த் மலினேனி விஜயை சந்தித்து கதை சொல்லியதாகவும்,  அந்த கதை விஜய்க்கு பிடித்துள்ளதாகவும் கூறப்படுகிறது. இதனால் கோபிசந்த் படத்தில் நடிக்க விஜய் சம்மதித்துள்ளதாகவும் இப்படம் தமிழ் மற்றும் தெலுங்கில் தயாராக உள்ளதாகவும்  தகவல் வெளியாகியுள்ளது. 

மசாலா படங்களுக்கு பெயர் போன கோபிசந்த் 

அதிரடி, ஆக்‌ஷன் படங்களுக்கு பெயர்போன கோபிசந்த் மலினேனி இயக்கத்தில் சமீபத்தில் வெளியான க்ராக், மற்றும் வீரசிம்மா ரெட்டி படங்கள் ரசிகர்கள் மத்தியின் வரவேற்பை பெற்ற நிலையில், விஜயுடன் கோபிசந்த் இணையும் படத்திற்கு எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இந்த திரைப்படமும் அதிரடி ஆக்‌ஷன் மற்றும் செண்டிமண்ட் கலந்த படமாக உருவாக உள்ளதால் இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.