மல்யுத்த வீராங்கனைகளுக்கு நீதி கேட்டு எஸ்டிபிஐ கட்சியினர் ஆர்ப்பாட்டம்

sdbi party protest

வலுக்கும் மல்யுத்த வீராங்கனைகளின் போராட்டம்

இந்திய மல்யுத்த சம்மேளன தலைவரும், பாஜக எம்பியுமான பிரிஜ் பூஷன் சரன்சிங் மீது மல்யுத்த வீராங்கனைகள் பாலியல் புகார் கூறியிருந்தனர். பிரிஜ் பூஷன் மீது இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என கூறி  மல்யுத்த வீராங்கனைகள் டெல்லியில் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும், நாட்டிற்காக வாங்கிய பதக்கங்களையும் கங்கையில் வீசப்போவதாக கூறியிருந்தனர். இது நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், பல்வேறு எதிர்கட்சிகள் மல்யுத்த வீராங்கனைகளுக்கு ஆதரவாக கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். பிரிஜ் பூஷன் மீது நடவடிக்கை எடுக்க கோரியும் குரல் கொடுத்து வருகின்றனர். அதேபோல், நாட்டின் பல்வேறு பகுதிகளில் மல்யுத்த வீராங்கனைகளுக்கு ஆதரவாக குரல் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். 

எஸ்டிபிஐ கட்சி ஆர்பாட்டம் 

இந்நிலையில், மல்யுத்த வீராங்கனைகளுக்கு ஆதரவாக எஸ்டிபிஐ கட்சியினர் திருச்சியில் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது மத்திய அரசை கண்டித்தும் மத்திய அரசுக்கு எதிராக முழக்கங்கள் எழுப்பியும் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்திற்க்கு திருச்சி தெற்கு மாவட்ட தலைவர் முபாரக் அலி, மேற்கு தொகுதி தலைவர் கவிஞர் நா, சிராஜிதீன், ஆகியோர் கலந்து கொண்டு கண்டன உரையாற்றினர்.