தமிழக ஆளுநருக்கு வேறு வேலை இல்லை அதனால் தான் அடிக்கடி டெல்லி செல்கிறார் - அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் 

uthayanithi stalin

திருச்சிக்கு வந்த உதயநிதி

தஞ்சாவூர் மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்ட இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் திருச்சிக்கு வருகை தந்தார். அப்போது அமைச்சர் உதயநிதி செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அதிமுகவிற்கு திமுக அமைச்சர்கள் பயப்படுகிறார்கள் என்று எடப்பாடி பழனிச்சாமி கூறியுள்ளதாக எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளித்த உதயநிதி, என்ன பாத்தா பயந்த மாதிரி உங்களுக்கு தெரிகிறதா.. ? எதிர்க்கட்சித் தலைவர் அப்படித்தான் பேசுவார். என கூறினார். 

யாருக்கும் பயந்தவர்கள் கிடையாது 

தொடர்ந்து அவர் பேசியதாவது; யார் யாருக்கு அடிமை என்பது மக்களுக்கு தெரியும் உலகத்திற்கே தெரியும் பாஜகவிற்கு அடிமை அதிமுக தான். திமுகவும் எங்களுடைய தலைவர் கலைஞரும் ஸ்டாலினும் யாருக்கும் பயந்தவர்கள் கிடையாது. கர்நாடகாவில் இருந்து தண்ணீர் கொண்டு வருவதற்கு முதலமைச்சர் கண்டிப்பாக நடவடிக்கை எடுப்பார். திமுக ஆட்சிக்கு வந்ததும் ஒவ்வொரு தேதியும் குறிப்பிட்ட தேதியில் தண்ணீர் திறந்து விடப்பட்டு வருகிறது. ஆளுநர் இன்று டெல்லி செல்கிறார். அவருக்கு வேறு வேலைகள் இல்லை அதனால்தான் டெல்லிக்கு அடிக்கடி சென்று வருகிறார். என அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பதில் அளித்தார்.