சமயபுரம் மாரியம்மன் கோயில் உண்டியல் காணிக்கைகளை எண்ணும்போது நகை திருடிய இரண்டு பேர் 

samayapuram

திருச்சி மாவட்டம் சமயபுரம் மாரியம்மன் கோவிலில் உண்டியல் காணிக்கைகளை எண்ணும் பணியில் ஈடுபட்டபோது நகைகளை திருடிய இரண்டு பேரை போலீசார் கைது செய்தனர்.

பிரசித்தி பெற்ற திருக்கோவில் 

அம்மன் தலங்களில் மிகவும் பிரசித்தி பெற்றது சமயபுரம் மாரியம்மன் கோவிலாகும். இக்கோவிலுக்கு தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தந்து அம்மனை தரிசனம் செய்து வருகின்றனர். அவ்வாறு பக்தர்கள் உண்டியலில் செலுத்தும் காணிக்கைகளை கோயில் மண்டபத்தில் எண்ணுவது வழக்கம். அதன்படி கோயில் இணை ஆணையர் கல்யாணி தலைமையில் கோயில் பணியாளர்கள் தன்னார்வலர்கள், வங்கி பணியாளர்கள் உள்ளிட்டோர் காணிக்கைகளை எண்ணும் பணியில் ஈடுபட்டனர். 

காணிக்கையை எண்ணும்போது திருட்டு

இந்நிலையில் உண்டியல் காணிக்கைகளை எண்ணும் பணியில் ஈடுபட்டிருந்த கடலூர் மாவட்டம் பண்ருட்டியைச் சேர்ந்த 21 வயதான அஜய், கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி பகுதியைச் சேர்ந்த 28 வயதான  ஜெயக்குமார் ஆகிய  இருவர் 6 பவுன்  நகைகளை திருடி  உள்ளனர்.இதுகுறித்து சமயபுரம் காவல் நிலையத்தில் கோயில் நிர்வாகம் சார்பில்  புகார் அளித்தனர். புகாரின் பேரில் சமயபுரம் போலீசார் இருவர் மீதும் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.